ஈஎன இரத்தல் இழிந்தன்று;அதன் எதிர்
ஈயேன் என்றல் அதினினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று,அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப,நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக்,கலங்கிச்
சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்;அதனாற்
புலவேன் வாழியர்,ஓரி;விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்!நின்னே.
---புறநானூறு
பாடியவர்:கழைதின் யானையார்.
பாடப்பட்டோன்:வல் வில் ஓரி
திணை:பாடாண்.துறை:பரிசில்
==அதனினும் உயர்ந்தது==
Posted by
Subramanian
at
0
comments
Labels: வேண்டுவோர்க்கு உதவுங்கள்
Subscribe to:
Posts (Atom)